சமீப காலமாக முக்குலத்தோருக்கும்,நாயக்கர் சமூகத்திற்கும் நடந்த ஊர் சண்டையை வைத்து ஏதோ காலம் காலமாக முக்குலத்தோர்கள் நாயக்கர்களுக்கு நண்பர்கள் போலவும்,நாயக்கர்களின் பணியாள் போலவும் இருந்ததாக தமிழ் தேசியவாதிகள் போர்வையில் ஒழிந்து கொண்டு பிதற்றி வருகிறார்கள்.
அவர்களுடைய வாதமும் இனிமேலும் நாயக்கர்களுக்கு அடங்கி போகாதீர்கள் என்று தமிழ் இனப்பற்றுவாதிகள் போல புலம்புகிறார்கள், அவர்களுக்காகவே இந்த பதிவை சமர்பிக்கிறேன்.
மதுரையில் திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சி செய்த வருடத்தில் கிபி1623 முதல் 1659 வரை அவருக்கு மதுரையில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது மதுரை தன்னரசு கள்ளர்களே!
நாயக்கர்கள் ஆட்சிக்கு கட்டுப்படாத தன்னரசு கள்ளர் நாட்டு தலைவர்கள் திருமலை நாயக்கருக்கு எதிராக இறுதிவரை கலகத்தில் ஈடுபட்டனர்
தனிக்காட்டு தன்னரசு கள்ளர் படைப்பற்றை, தென் தமிழகத்தை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த திருமலை நாயக்கரால் வெல்ல முடியாமல் திருச்சி சொக்கலிங்க நாயக்கரிடம் உதவி கேட்கிறார்.
சொக்கலிங்க நாயக்ககரோ மிகவும் மிகுந்த தடுமாற்றத்துடன் தனது தளபதியான வீரையன் சேர்வையை(மதுரை வீரன்) பீரங்கி,குதிரைப்படை,யானைப்படை உள்ளிட்ட படைகளுடன் மதுரைக்கு அனுப்பி வைக்கிறார்.
இதனை உரையாடல் வடிவிலே தருகிறேன்.
சொக்கலிங்க நாயக்கர்:
மதுரைக்கு போய் வன்மையுடன் தன்னரசு கள்ளரைத்தான் மதம் மடக்கி வாரும் தளபதியே
வீரையன் சேர்வை:
15 நாளிலே பாங்கான தன்னரசு கள்ளர்களை வெட்டி கருவறுத்து விருது பெற்று வருகிறேன் மன்னா!
சொக்கலிங்க நாயக்கர்:
அது சுலபம் அல்ல “தனிக்காட்டுத் தன்னரசு கள்ளர் நாட்டை கருவறுக்க ஒரு வேந்தரால் முடியாது” தளபதி!
வீரையன் சேர்வை:
இதை கவனம் கொண்டு தன்னரசு கள்ளர் நாட்டை கருவறுத்து வருகிறேன் மன்னா!
இப்படியாக சொக்கலிங்க நாயக்க மன்னரிடம் உத்தரவு பெற்று தனது பெரும்படையுடன் மதுரை எல்லைக்கு வந்தடைகிறார் வீரையன் சேர்வை....!
வீரையன் சேர்வையின் படையை வந்ததை அறிந்த திருமலை நாயக்கர் தனது சிம்மாசனத்தில் இருந்து துள்ளி குதித்தெழுந்து தன்னரசு கள்ளர் பற்று அழியப்போவதை என்னி ஆனந்த கண்னீருடன் பார்க்கிறார்.
திருமலை நாயக்கர் வீரையன் சேர்வையை வரவேற்று சில பரிசுகளையும் கொடுத்து 10நாட்டு தன்னரசு கள்ளர் நாட்டை கருவறுக்க கோருகிறார்.
இதன் பின்பு திருமலை நாயக்கர் படையும்,வீரையன் சேர்வையின் படையும் இனைந்து போருக்கு தயாராகின்றனர்.
இதனை அறிந்த 10நாட்டு தன்னரசு கள்ளர் நாட்டை சேர்ந்த கள்ளர் தலைவர்கள் நாட்டுக்கூட்டம் கூட்டி போருக்கு தயாராகிறார்கள்.
மதுரை நகரத்தின் மத்திய பகுதியில் 10நாட்டு தன்னரசு கள்ளர் படைப்பற்று தங்களுடைய பூர்வீக ஆயுதங்களாக வளரி,வாள்,வேல் போன்ற ஆயுதங்களுடன் நாயக்கர் கூட்டுப்படையை பேய் தாக்குதலால் உருக்குலைய வைக்கின்றனர்.
இதனை அறிந்த வீரையன் சேர்வை களத்தில் நேரடியாக இறங்கி போர் புரிகிறார். கன்னில் பட்ட அனைத்து கள்ளர்களையும் சிறைபிடிக்காமல் முழுவதுமாக வெட்டிக்கொலிக்கிறார்.
இருபுறமும் இழப்புகள் ஏராளமாக நடைபெற்றது, தன்னரசு கள்ளர் பற்று தனது படைகளுடன் மதுரை புறமலை நாட்டிற்கு பின் வாங்குகிறது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத திருமலை நாயக்கர் ஆனந்த மிகுதியில் பொன்,வைரங்களால் வீரையன் சேர்வையை அலங்கரிக்கிறார்.
இருந்தாலும் திருமலை நாயக்கரால் தன்னரசு கள்ளர் நாட்டு பற்றை முழுமையாக ஒழிக்க முடியவில்லை...!
இதனால் திருமலை நாயக்கர் தன்னரசு கள்ளர் நாட்டை தனக்கு கட்டுப்பட்ட பாளையமாக மாற்ற ஒரு யுக்த்தியை கையாளுகிறார்.
அது தான் தன்னரசு கள்ளர் நாட்டு வீரனான பின்னத்தேவரை அழைத்து அவருக்கு பொன் பொருட்களை பரிசளித்து திருமலை பின்னத்தேவர் என பட்டம் சூட்டி 10நாட்டுக்கும் தலைவராக அறிவித்தார்.
ஆனால் தன்னரசு கள்ளர் நாட்டு தலைவர்களோ பின்னத்தேவரை நாட்டை விட்டு விலக்கி வைக்கின்றார்கள்.
மேலும் இதன் விளைவால் பின்னத்தேவரால் 10நாட்டுக்குள் பெண் எடுக்க முடியாத சூழல் உருவாகி “விலக்கு கள்ளர்களிடம் இருந்து பெண் எடுத்துக்கொண்டார்.
இறுதிவரை தன்னரசு கள்ளர் நாட்டுக்குள் நுழையாமல் திருமலை நாயக்கருக்கு தளபதியாகவே திகழ்ந்தார்.
இந்த சமயத்தில் வீரையன் சேர்வை திருமலை நாயக்கர் கோட்டையில் தகாத நடவடிக்கையால் திருமலை நாயக்கரின் உத்தரவின் பேரில் திருமலை பின்னத்தேவர் வீரையன் சேர்வையை மாறு கை மாறு கால் வாங்குகிறார்.
மன்னர் திருமலை நாயக்கர் தனது வாழ் நாள் இறுதிவரை மேல் நாட்டு கள்ளர் நாட்டிலோ,கீழ் நாட்டு கள்ளர் நாட்டிலோ சல்லி பைசா கூட வரி வசூல் செய்ய முடியவில்லை.
நாயக்கர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரை இந்த தன்னரசு கள்ளர் பற்று சுயமரியாதையோடு வாழ்ந்தனர் என்பதே வரலாறு.
இது போக திருமலை நாயக்கரால் சிறை பிடிக்கப்பட்ட கொன்றிமாயத்தேவர் மற்றும் கத்திக்காரனை. மாயக்காள்,ராக்கம்மாள் எனும் இரு கள்ளர்குல நாச்சியார்கள் கள்ளர் பற்றை திரட்டி நாயக்கர் கோட்டையை தகர்த்து நாயக்கர் படையை விரட்டி இருவரையும் மீட்டார்கள் என்பது தனி வரலாறு.
வரலாறு இப்படி இருக்க திருமலை நாயக்கர் தெப்பக்குளத்தை அடிமைகளை வைத்து உருவாக்கி, பின்பு அந்த அடிமைகளுக்கே முதல் மரியாதையும் கொடுக்கிறார்.
அந்த அடிமைகளும் இன்றுவரை நாயக்கர்கள் போட்ட பிச்சை மரியாதையை தெப்பத்திருவிழாவில் அனுபவத்தி வருகிறார்கள்.
இப்படி அவர்கள் வரலாறு இருக்க இன்று ஏதோ தமிழ் தேசியவாதிகள் என்ற போர்வையில் வடுகனை தமிழ் நாட்டை விரட்ட வேண்டும் என்று பிதற்றுகிறார்கள்.
மேலும் இதே திருமலை நாயக்கர் காலத்தில் சடைக்க தேவரின் மறப்படைக்கும் திருமலை நாயக்கரின் தளபதிக்கு பல போர்கள் நடந்தேறி சேதுகரையில் நாயக்க படைகளின் இரத்தம் கடலாக ஓடியது.....!
என்னுடைய கேள்வி என்னவென்றால் இந்த வரலாறு எல்லாம் தமிழ் தேசியவாதிகளுக்கு தெரியுமா அல்லது தெரிந்தும் புறக்கணிக்கிறார்களா...!
இது தெரியாமல் முக்குலத்து இளைஞர்களே வடுகன் ஒழிக என கோஷம் போடுகின்றனர்,
முக்குலத்து இளைஞர்களே நம்மிடம் என்றும் நாயக்க மக்கள் எதிர்க்க மாட்டார்கள், காரணம் அவர்களுக்கு வரலாறு நன்றாக தெரியும்.
நான் உங்களை நாயக்கர்கள் வாழ்க என்றும் சொல்ல வேண்டாம் வடுகன் ஒழிக என்றும் சொல்ல வேண்டாம்.
நம்முடைய இழந்த உரிமையான DNTக்கு குரல் கொடுங்கள், அது போதும் போலி தமிழ்தேசியவாதிகளின் வலையில் விழ வேண்டாம்.
குறிப்பு: வீரணன் சேர்வையும் கள்ளர் சமூகம் தாம் அவரை வளர்த்தது ஒர் அருந்ததியர் இனத்து பெண், இன்றும் மதுரை வீரனை திருச்சி மற்றும் புதுக்கோட்டை நாட்டு கள்ளர்கள் குல தெய்வமாக வழிபடுகிறார்கள். ஆக நமக்கு எதிரி நாமே😒
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு
நன்றி
மதுரை வீரன் அம்பானை (சரஸ்வதி நூலகம்)







