Thursday, October 18, 2018

குறவர்களை அரவனைத்த கள்ளர் ஜமீன்

கண்டர் கோட்டை (அ) கந்தவர்கோட்டை







இராஜ இராஜ சோழ தேவர் காலத்தில் கண்டராத்திய சோழ கோட்டை என அழைக்கப்பட்டு பின்பு கண்டர் கோட்டை (அ) கந்தவர்கோட்டை என அழைக்கபடும் இந்த பகுதியை 1000 வருடங்களாக கள்ளர்குல அரையர்களான பண்டாரத்தார்களால் ஆளப்பட்ட நாடாகும்.
இன்றும் இந்த ஊர்களில் கள்ளர் பெருமக்கள் கண்டர்,கண்டர் கிள்ளி,கண்டர் சில்லி, கண்டராயர்,கண்டவராயர் என தங்களது சோழ முன்னோர்களின் பட்டத்தை மார்பில் தாங்கி வாழ்கின்றனர்.
சோழர்கள் காலத்தில் நாட்டமைப்பில் இருந்த இந்த கள்ளர் நாடு, நாயக்கர் காலத்தில் பாலையமாக சுருக்கப்பட்டது, பின்பு பிரிட்டீஸ் காலத்தில் ஜமீனாக மேலும் சுருங்கப்பெற்றது.
பிரிட்டீஸ் காலத்தில் 53கிராமங்களை உள்ளடக்கியதாக நம் கந்தவர்கோட்டை ஜமீன் இருந்தது.
பிரிட்டீஸ் இந்தியாவில் இந்த கந்தவர்கோட்டை ஜமீந்தார் முதன் முதலாக தமிழ்நாட்டில் ஜமீந்தாரரின் முகவர்களாக குறவர் இனமக்களை நியமித்தார். குறவர் மக்களை வேற எந்த ஜமீந்தார்களும் முகவர்களாக நியமித்ததில்லை.
ஒரு பழம்பெரும் தமிழ் குடியான குறவர் பழங்குடியினரை நாட்டுக்குள் ஒரு மரியாதைக்குரிய ஜமீந்தார் முகவர் பதிவியில் அமர வைத்து அழகு பார்த்தவர்கள் தான் கந்தவர்கோட்டை கள்ளர் குல ஜமீந்தார்கள்.
இவ்வளவு பாரம்பரியமிக்க இந்த கள்ளர் ஜமீன் இன்று சிதலமடைந்த அரண்மனையுடன் ஒரு சிறு ஊராக காட்சியளிப்பதை கண்டால் வேதனையாக உள்ளது.
மிகவும் வீரமிக்க இந்த நாட்டை சேர்ந்த கள்ளர்கள் குற்றப்பழங்குடி சட்டத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு அவர்கள் எந்த தமிழ் பழங்குடியை(குறவர்கள்) சமூகத்தில் ஒரு அந்தஸ்தை கொடுத்து அழகு பார்த்தார்களோ அவர்களும் குற்றப்பழங்குடி சட்டத்தில் கடுமையான இன்னல்களுக்கு ஆளானார்கள்.
இந்த குற்ற பழங்குடி சட்டத்தால் இன்று அந்த ஊரில் குறவர் மக்களின் குடியே இல்லாமல் உள்ளது மிகவும் வேதனையாகவும்,நெருடலாகவும் உள்ளது மக்களே!
கந்தவர்கோட்டை ஜமீன் கடந்த ஏழு தலைமுறையின் பெயர்கள்
1) சூர்யா நாராயண பண்டாரத்தார் 
2) அர்ஜுனனாதன் பண்டாரத்தார் 
3) ராஜா கோபால பண்டாரத்தார்
4) ராமச்சந்திர துரை பண்டாரத்தார்
5) ராமச்சந்திர துரை ராஜா பண்டாரத்தார்
6) துரை ராஜா பண்டாரத்தார்

இந்த கள்ளர்குல பண்டாரத்தார்கள் புதுக்கோட்டை தொண்டைமானுடன் நெடுங்காலமாக பெண் எடுத்துள்ளனர்.
குறிப்பு: குறவர் பழங்குடியினர்கள் இன்று
கள்ளர் பழங்குடியினருடன் இனைந்து 
DNTக்காக போராடி வருகின்றனர்.

*************வெல்லட்டும் DNT****************
நன்றி
MADRAS DISTRICT GAZETTEERS (TANJORE)
மராட்டிய ஆவணங்கள் தஞ்சை

தொண்மை ஆவணங்கள் உதவி - உயர்திரு இரமேஷ் மோகன்
கள ஆய்வு உதவி - உயர் திரு பரத் கூழாக்கியார்
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு