தலைப்பை பார்த்தவுடனே வேலு நாச்சியார் மறவர் அவருக்கும் கள்ளருக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்டுக்கும் உட்பிரிவினைவாதிகளுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்.
1772ல் சிவங்கங்கை சீமை நவாப் தலைமையில் ஆங்கிலேயர் கையில் நாட்டை இழந்தார் நம் போற்றுதலுக்குரிய அம்மா வீரமங்கை வேலு நாச்சியார்.
நாட்டை இழந்த அம்மா வேலு நாச்சியாரும் அவர்தம் பெண் குழந்தையுடனும்,சின்ன மருது பாண்டியனாருடனும் திண்டுக்கல்லில் உள்ள விருப்பாச்சி பாளையத்தில் கள்ளர் தலைவர்களுடன் அடைக்கலம் அடைகிறார்.
அப்படி அவர் தஞ்சம் அடைந்த அம்மா வீரமங்கையால் நாட்டை மீட்காமல் உறக்கம் இன்றி கள்ளர் படைப்பற்று தலைவர்களுடன் ஆங்கிலேயர்களுக்கும்,நாவாப்பிற்கும் எதிராக அவ்வப்போது கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சிவங்கை இராஜ பிரதாணியான தாண்டவராய பிள்ளையிடம் சொல்லி ஹைதர் அலிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.
08:12:1772
அந்த கடிதத்தில் “ஆற்காடு நவாப் இராமநாதபுரம்,சிவகங்கை சீமையையும் ஆக்கிரமித்து அழிவை ஏற்படுத்துகிறார்கள், நான் இங்கு கள்ளர் தலைவர்களுடன் சேர்ந்து அவ்வப்போது கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
நீங்கள் எனக்கு படை உதவி அளித்து உதவ வேண்டும் என மைசூர் சிங்கத்திற்கு கடிதம் எழுகிறார்.
மேலும் இராஜ பிரதாணி தாண்டவராய பிள்ளை சிவகங்கை கள்ளர் நாட்டார்களுக்கு ஓலை அனுப்பி சிவ்கங்கையை மீட்க்கும் பணியில் இறங்குகிறார்.
அம்மா வேலு நாச்சியாருக்கு பிரதாணி அவர்கள் போற்றுதலுக்குரிய தொண்டைமானார் பூமியில் உள்ள பாய்குடியில் தங்கி சிவகங்கையின் நடவடிக்கைகளைப் பற்றி கடிதம் எழுதுகிறார்.
அந்த கடிதத்தில் தஞ்சை மராட்டியரும்,தொண்டைமானரும் படை உதவியும்,பொருள் உதவியும் தர சம்மதித்து உள்ளனர்.மேலும் இங்கு ஹைதர் அலியின் படையும் வரவிருக்கிறது. இதை பயன்படுத்தி நான் சிவகங்கையையும்,இராமநாதபுரத்தையும் மீட்கலாம் என எழுதுகிறார்.
கள்ளர் பெருமகனார் தொண்டைமானரை விமர்சிக்கும் முன் இதை சற்று உள்வாங்கி விமர்சனம் செய்ய கோருகிறேன்.
அக்காலத்தில் இருந்த ஒற்றுமை இன்று இல்லை என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.
ஒவ்வொரு முறை உட்பிரிவு சண்டை வரும் போது ஒற்றுமை ஒற்றுமை என கொடி பிடிப்பதை விட அக்காலத்தில் நடந்த வரலாற்று சம்பவத்தை நேர்மையாக உட்பிரிவு பார்க்காமல் கட்டுரையாக வந்தால் இக்கால தலைமுறையினருக்கு ஒற்றுமை என்னவென்று புரியும்.
இதில் இன்னொரு சம்பவம் என்னவென்றால் சிவகங்கையை மீட்க வந்த மைசூர் சிங்கத்தின் படையும் “கள்ளர் பற்றே” வரலாற்றை மறைக்க மறைக்க உட்பிரிவு மோதல் அதிகரிக்கத் தான் செய்யும்.
இந்த நேரத்தில் என் எண்ணத்தில் ஓடுவது எல்லாம் அம்மா வீரமங்கை வேலு நாச்சியார் தனது கணவனை இழந்து நாட்டை இழந்து தனது குழந்தையுடன் இன்னொரு நாட்டில் அடைக்கலம் அடைந்தாலும் அந்த மறத்தியாரின் வீரமும்,செருக்கும்,வைராக்கியமும் கொஞ்சம் கூட குறையாமல் அந்த இடத்தில் உள்ள தனது இனத்தின் கள்ளர் பெருமக்களின் தலைவர்களை ஒன்று திரட்டி தனது நாட்டை மீட்ட அந்த அம்மாவையும்,கள்ளர் தலைவர்களையும் நான் என் வாழ் நாள் முழுவதும் நெஞ்சில் சுமக்க கடமைப் பட்டுள்ளேன்.😓
இன்றுள்ள நமது பெண் குழந்தைகளுக்கு இந்த வரலாறை கொண்டு செல்லுங்கள் எனது இரத்த தேவமார்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
MILLITARY COUNTRY CORRESPONDENCE VOL.3
சீர்மிகு சிவகங்கை BY Dr.கமால்
மாயக் கருப்பன் மதுரை
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு


