Thursday, October 18, 2018

பழிக்கு பழி இரத்ததிற்கு இரத்தம்

பாகம் - 2










சென்ற பாகத்தில் நாம் கர்னல் ஹெரான் பிரிட்டீஸ் படைகள் கோவில்குடியில் கள்ளர் பழங்குடியினரின் சாமி சிலையை திருடி அந்த கோவிலை சூரையாடி கொள்ளையடித்ததை பார்த்தோம்
அந்த சம்பபத்திற்கு பிறகு பிரிட்டீஸ் படைகள் நெல்லைக்கு சென்றது அங்கு நமது நெல்லை வேங்கை பூலித்தேவரிடம் தூதுவனை அனுப்பி வரி கேட்டது.
ஆனால் நம் வேங்கை பூலித்தேவரோ வரிகொடுக்க மறுத்துவிட்டார், அதனால் கோபமுற்ற கர்னல் ஹெரானும்,கான் சாகிப்பும்(மருத நாயகம்) பூலித்தேவரின் வலிமையான கற்கோட்டையில் 3முறை பீரங்கியால் சுட்டு பயமுறுத்தி அவரால் எளிதில் கொடுக்கக்கூடிய பணமான ரூபாய்60000 மட்டும் கொடுத்தால் தாக்குதல் நடத்தமல் நாங்கள் நெல்லையை விட்டு வெளியேறுகிறோம் என்று கூறுகிறார்கள்.
ஆனால் பூலித்தேவரோ சல்லி பைசா கூட கொடுக்க முடியாது, உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று கூறுகிறார். மேலும் பிரிட்டீஸ் படைகள் முன்னதாக செஞ்சி,மணப்பாறை,மதுரையில் சண்டையிட்டு களைப்பாக இருந்தும் அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களும் குறைவாக இருந்ததை உணர்ந்த கர்னல் ஹெரான் மதுரைக்கு சென்று தேவையான உணவு பொருட்களை பெற்று ஓய்வும் எடுத்து கொண்டு பிறகு வந்து தாக்கலாம் என்று தனது படையை மீண்டும் மதுரைக்கு செல்ல முற்படுகிறார்.
மதுரைக்கு வந்த தனது படைகளுடன் வந்த ஹெரானுக்கு பிரிட்டீஸ் கவுன்சிலிடம் இருந்து அழைப்பு வருகிறது,
அதனால் ஒட்டு மொத்த பிரிட்டீஸ் படையும் திருச்சி நோக்கி செல்லத் தயாராகின்றன.

ஆனால் கிழம்புவதற்கு முன்பாக பிரிட்டீஸ் உளவுத்துறையிடம் இருந்து கர்னல் ஹெரானுக்கும் அவரது படைகளுக்கும் ஒரு அதிர்ச்சி தகவல் வந்தது.(இந்த உளவு தகவலில் காட்டு மிருங்களும்,கள்ளர் படை உலாவும் ஆபத்தான நத்தம் கணவாயை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தபடுகிறது)
அதாவது மதுரை பிரிட்டீஸ் கமாண்டர் தனது படைகளை நத்தம் கணவாயில் உள்ள மாடுகளை பிடித்து வருவதற்காக அணுப்புகிறார் ஆனால் அங்கு சென்ற அனைவரையும் கள்ளர் படைகள் ஊசிமுனை அளவு கூட ஈவு இரக்கமின்றி குத்தி சரித்துவிடுகிறார்கள்.
இதன் மூலமாக கர்னல் ஹெரானையும் அவரது படைகளையும் பழிக்கு பழியாக இரத்த ருசி காண்பதற்கும் இழந்த தங்களுடைய சாமி சிலையை மீட்பதற்கும் கள்ளர் படைகள் நத்தம் கணவாயில் தாயராக இருப்பதாக பிரிட்டீஸ் உளவுத் துறை தகவல் அளிக்கிறது.
இந்த அதிர்ச்சி தகவலால் கேட்டு இரத்தம் உறைந்து போன கர்னல் ஹெரான் மிகவும் நுணுக்கமாகவும்,தந்திரமாகவும் தனது படையை நான்கு பாகமாக பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கு ஒரு கேப்டன் தலைமை கொண்டு வழி நடத்த ஆணையிடுகிறார்.
கிபி1755 மார்ச் 28ஆம் நாள் மதுரையிலிருந்து வெளிச்சி நத்தம் பகுதிக்கு கர்னல் ஹெரானின் படை இரத்தம் உறைந்து மிகுந்த எச்சரிக்கையோடு வந்தடைகிறது.
முதலில் ஒரு சார்ஜண்ட் தலைமையில் 12 இரோப்பியர்களும் மற்றும் படைவீரர்களும் செல்கிறார்கள். அவர்களை தொடர்ந்து முதல் பிரிவு படை பீரங்கிகளுடன் செல்கிறது.
பின்பு இரண்டாவது படைப் பிரிவு கேப்டன் பொலிர் தலைமையில் செல்கிறது. கேப்டன் பொலிரை தொடர்ந்து மூண்றாவதாக ஒரு சார்ஜண்ட் தலைமையில் சில் பீரங்கிகளுடன் படைகள் செல்கிறது.
இறுதியாக நான்கவதாக கேப்டன் ஸ்மித் தலைமையில் யானைகள்,ஒட்டகங்கள்,பல சிறிய பீரங்கிகள், 6 ராட்சத பீரங்கிகள்(இந்த பீரங்கிகளில் தான் கள்ளர்கள் சாமி சிலை உள்ளது) 20இரோப்பியர்கள்,40 இங்கிலிஸ் படையில் இந்த பிரஞ்சு வீரர்கள்,200 சிப்பாய்களுடன் மிகுந்த கவனத்துடன் முன்னேறியது.
இத்தனை பேரையும் பலிகிடாவாக முன் அனுப்பி கர்னல் ஹெரான் இறுதியாக வருகிறார்.
முதலில் சென்ற இராணுவ பிரிவு தாங்கள் எந்த தாக்குதலுக்கும் ஆளாகவில்லை, இங்கு கள்ளர்களின் நடமாட்டம் இல்லை என தகவல் அளிக்கிறார்.
அனைத்தும் பாதுகாப்பாக செல்கிறது என அனைவரும் மகிழ்ச்சியோடு சென்று கொண்டிருந்தனர். ஆனால் இதை அனைத்தையும் வழித்தடத்தின் இருபுறத்திலும் கள்ளர்கள் தங்களுடைய உளவுபடை உளவாளிகள் மூலம் அத்தனை நிகழ்வையும் அவர்களுக்கே தெரியாமல் கண்காணித்து தகவல் கொடுத்து கொண்டிருந்தனர்.
இவ்வளவு பெரிய ஆங்கிலப்படைகளை தனிமை படுத்துவதற்காக கள்ளர்கள் வழித்தடத்தில் மரங்கள வெட்டி 30பேர் வரிசையாக செல்லும் வழியை 10பேர்களுக்கும் குறைவாக செல் அளவு பாதையை சுருக்குகிறார்கள்.
சரியாக கேப்டன் ஜோசப்பின் பீரங்கி படையுடன் வந்த சாமி சிலை பிரிவை கள்ளர்கள் வெட்டி வைத்த புதைகுழியில் பீரங்கி ஓட்டுனர் கவனமின்றி இறக்கிறார்.
இதனால் முன்னாடி சென்ற படைகளுக்கும் இவர்களுக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது, மேலும் என்ன தாமதம் எனக்கேட்க எந்த வீரர்களும் வரவில்லை(கள்ளர் படையால் கொல்லப்படுகின்றனர்)
மாஸ்டர் ஸ்டோக் போல் தங்களுக்கு ஏற்றால் போல் கள்ளர் படை ஆங்கிலேயப்படையை இயக்கியது, இதனால் பின்னால் வந்த அனைத்து படையும் ஒரே இடத்தில் தப்பித்து ஓட முடியாதவாறு தேங்குகிறது.
ஆங்கிலபடைகள் என்ன செய்வதன்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென கள்ளர் படைகள் தங்களுடைய ஆயுதங்களுடன்(வளரி,வில் அம்பு,18அடி ஈட்டி,நாட்டு துப்பாக்கிகள்) பயன்படுத்தி ஒருவிதமான வினோத சத்தம் எழுப்பி நான்கு பக்கமும் திரண்டு தாக்குதல் நடத்துகிறார்கள்.
கேப்டன் ஜோசப் படைகள் பீரங்கி மற்றும் நவீன ஆயுதங்களுடன் எதிர் தாக்குதல் நடத்துகிறார்கள்.
ஆனால் திடீரனெ கள்ளர் படைகள் அனைத்தும் காட்டுக்குள் மறைந்து விடுகிறது.
ஆங்கிலபடைகளால் அவர்களையோ,அவர்கள் சென்ற இடத்தையோ கண்டுபிடிக்க இயலவில்லை.
இந்த முதல் தாக்குதலில் கேப்டன் ஜோசப் மற்றும் ஆங்கிலப்படைகள் இரத்தம் உறையும் அளவிற்கு பயந்து நடுங்கி ஆயுதங்களுடன் நிற்கின்றனர்.
சற்று நேரத்தில் மீண்டும் நான்கு பக்கமும் கள்ளர் படை சூழ்ந்து மிகவும் உக்கிரமாக தாக்குதலை தொடர்ந்து பல பிரிட்டீஸ் வீரர்களை கொன்று குவித்து முன்னேருகின்றனர்.
தாக்குதலில் சாமி சிலையை வைத்திருந்த பெரிய பீரங்கியை சுற்றி இருந்த அனைவரையும் கள்ளர் படை தங்களது ஈட்டியால் குத்தி சரிக்கிறார்கள்.
திடீரென ஒரு குரல் வந்ததும் அனைத்து கள்ளர் படையும் தக்குதலை நிறுத்துகிறது.
அந்த குரல் என்னவென்றால் சாமி...!சாமி..! சாமி...! ஆம் கள்ளர்களின் சாமி சிலையை கள்ளர் படை மீட்கிறது.(இந்த தாக்குதலில் நேரில் பார்த்த கேப்டன் ஜோசப் தனது டைரியில் அந்த மகத்தான சம்பத்தில் அந்த கள்ளர்கள் அவர்களுடைய மனைவி,குழந்தைகளை மீட்டால் வரும் சந்தோஷத்தை விட அனைவரும் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்தார்கள் எனக்குறிக்கிறார்)
சாமி சிலையை மீட்ட பின்பும் நத்தம் டவுனுக்கு செல்லும் வரை கள்ளர் படை கேப்டன் ஜோசப்பின் படையை தாக்குதல் நடத்தி கொண்டே விரட்டுகிறது.
இந்த தாக்குதலில் நிலைகுலைந்த ஆங்கிலப்படைகள் அனைத்து இராணுவ தடவாளங்களையும் போட்டுவிட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடியது.
இறுதியாக கள்ளர் படை தாக்குதலில் எஞ்சியிருந்த சில வீரர்களுடன் கேப்டன் ஜோசப்பும்,கர்னல் ஹெரானும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நத்தம் டவுனுக்கு வருகிறார்கள்.
இந்த சம்பவத்தை கேப்டன் ஸ்மித் நாங்கள் உயிர் பிழைத்து வந்தது ஆண்டவனின் மகிமை என்றும், கள்ளர்கள் மிகவும் ஆபத்தான வீரமிக்க பழங்குடியினர் என்றும் பிரிட்டீஸ் கவுன்சிலிடம் தெரிவிக்கிறார்.
இதனை நன்கு உள்வாங்கிய பிரிட்டீஸ் கவுன்சில் நத்தம் கணவாயை ஆபத்து பகுதியாக அறிவித்து அந்த வழியாக செல்லும் போது அனைத்து படைகளும் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என அறிவிக்கிறது.
இந்த ஒட்டு மொத்த சம்பத்தை ஆராய்ந்த பிரிட்டிஸ் முன்னாள் ஆவணக் காப்பாளர் S.C ஹீல்,
கர்னல் ஹெரான் தேவையில்லாமல் கள்ளர் பழங்குடியை சீண்டி நண்றாக வாங்கி கொண்டார் எனவும்.

இந்த சம்பவத்தை அனைத்து பிரிட்டீஸ் ஆய்வாளர்களும் தங்களது புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளனர்.
கர்னல் ஹெரான் இருந்த வரை பிரிட்டிஸ் படைகளும்,கள்ளர் படைகளும் மாறி மாறி இழப்பை சந்தித்தது.
இந்த கீரி,பாம்பு பகமை பெருங்காம நல்லூர் கள்ளர் தாக்குதல் வரை தொடர்ந்தது.
#குறிப்பு: தென்னிந்தியாவில் அனைத்து மன்னர் மட்டும் சிற்றரசர்களின் இரத்தம் பார்த்த ஆங்கிலேயர்கள் முதன் முதலாக அவர்களுடைய இரத்ததை பார்க்க வைத்தது கள்ளர் படை கையால் என்பது வரலாற்று உண்மை.
நன்றி
War of coromandel 
Military transactions of Hindustan 
The rebel commandant 
War of Asia 
British rules in India

அன்புடன்
சோழ பாண்டியன் 
ஏழுகோட்டை நாடு